Wednesday, May 13, 2009

நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை


ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
உன் சூரியன் மார்பிலே ஓரு வானவில் வந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் விழுந்ததா
உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா


ஆளை முன்னும் பின்னும் ஆசை பின்னும் பின்னும்
காதல் பெண்மைக்கு இங்கு சோதனை
தேடும் இன்னும் இன்னும் நூறு வண்ணம்
மோகம் சுட்டதென்ன ஜீவனை
நூறு ஜென்மமாய் தொடரும் இந்த காதல் யாத்திரை
மீதி ஜென்மமும் எனக்கு இங்கு வேறு யார் துணை
காதலில் நாணம் முடிந்துவிடாது
ஆ ஆ ஆ ஆ

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

கைகள் பட்டு பட்டு ஆசை மொட்டு விட்டு
தேகம் விட்டு விட்டு கூசுதே
பெண்மை கட்டு பட்டு நாளும் வெட்கப்பட்டு
நாணம் தொட்டு தொட்டு பூசுதே
ஏங்கும் தலையணைக்கு ஆளை தேடினாய்
தூங்கும் போதிலும் கனவு வந்து சேலை மூடினாய்
பனி துளி ஈரம் பூவுக்குள் தாவும்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா
உன் சூரியன் மார்பிலே ஓரு வானவில் வந்ததா
என் நெற்றியின் குங்குமம் உன் மார்பினில் விழுந்ததா
உனது நினைவினில் இந்த ஆண்டாள் வாழ்ந்தாள்

ஒ ரங்கா நாதா ஸ்ரீரங்க நாதா

No comments: