Friday, August 21, 2009

திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு



சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகளே அத்த மகளே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே உச்சி வெயில் வேர்க்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான் ஹொய்

தும்..தும்..தும்...தும்...
தும்..த...தும்

நாள் பாத்து பாத்து ஆளான நாத்து
தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து
ஆனந்த கூத்து நானாட பாத்து
பூவோரம் தானே ஊரும் தேனூத்து
நான் மாலை சூட நாள் பாரையா
ஆதாரம் நீதான் வேராரையா
பட்டிடத்தில் மேளம் கொட்டி முழங்க
தொட்டு விடு நாணம் விட்டு விலக
திட்டமிட்டு வாழ வாரேன் மாமா சட்டம் ஒன்னு போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

ஆஹ்ஹ்ஹ்ஹ்ன்ன்...பூந்தேரில் ஏறி
ஏழேழு லோகம் ஊர்கோலமாக நாமும் போவோமா
பாராளும் ஜோடி நாம் என்று பாடி
ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

நீரிண்ட்றி வாழும் மீன் ஏதம்மா
நீ இன்றி நானும் வீண் தானம்மா
பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க
தொட்டில் ஒன்னு ஆடு முத்து பிறக்க
கட்டிலறை பாடம் தாரேன் மானே கட்டளைய போடு..ஹொய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே
அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே
அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம் யாவும் நீதான்
ஹொய்

No comments: