Monday, August 31, 2009

காதல இதுதானோ காதல் இதுதானோ யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ


ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
அண்ணாந்து பார்த்தவளை அவன் கண்ணாலே கொன்னவனோ

பாஞ்சாலி குறிச்சி பெண்ணோ பரிசம் போடாம நான் நிற்பேனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


பேசாத பேச்சை எல்லாம் பேசித்தான் தீர்க்க வந்தேன்
ஆசாரி வீட்டை தேடி தங்க தாலி தான் செய்ய சொன்னேன்
முச்சந்தி பிள்ளையார் கோவிலின் தேங்காவாய்
என்னை நீ தூள் ஆக்கினாய்
முன் ஜாமீன் இல்லாமல் உன் நெஞ்சில்
சிறை வைத்து என்னை நீ கைதாக்கினாய்
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ


தேரோடும் தெருவை போல நெஞ்சில் உற்சாகம் உருண்டோடுதே
கிளையோடு மட்டும் இல்லை எந்தன் வேரோடும் பூ பூக்குதே
என் என்று தெரியாமல் ஏன் என்று புரியாமல் ஏதேதோ மயக்கம் வரும்
கை போடும் கோலங்கள் ரெண்டும் தான் போட தித்திக்கும் தயக்கம் வரும்

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

ஒஹோ ஆறடி ராட்சசனோ என்னை அடியோட சாய்ச்சவனோ
ஐந்தடி பூவை பெத்த நல்ல கவிஞன் தான் உன் அப்பனோ

காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ
காதல இதுதானோ காதல் இதுதானோ
யாரை பார்த்தாலும் உன்னை கண்டேனோ

அஹா ஆறடி ராட்சசனோ .....

No comments: