Friday, April 3, 2009

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன் புறக்கணித்தால் நான் என்னாவேன்


ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ


திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வரிகள்
காதல் என்றால் மெல்ல சாதல் என்றா சொல்ல

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்
கண்கள் ரெண்டில் காதல் வந்தால்
அஹா
கண்ணீர் மட்டும் துணையாகுமே
ஓஹோ ஹோ ஹோ

ஓரு கல் ஓரு கண்ணாடி
புரியாமல் மோதிக்கொண்டால் காதல்
ஓரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்

No comments: