Wednesday, April 8, 2009

உனகிங்கே உன்னை தவிர யாரும் இல்லை


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



ஒரு அலை மீது போவோம்
இலை போல தானே
உலகில் மனிதன் வாழ்க்கை
போகும் வரை போவோம் நாமே

அதில் அகங்காரம் என்ன
அதிகாரம் என்ன
அன்பின் வழியில் சென்றால்
கரை சென்று சேர்வோம் நாமே

கவலை இன்றி உலகத்திலே
மனிதன் யாரும் கிடையாது
கவலை தாண்டி போவதானால்
தாமரை பூக்கள் உடையாது

வாழ்க்கை என்னும் கண்ணீரை
காயத்தோடு தொட்டு பார்
காலமோட காயம் எல்லாம்
மாயமாய் மறையும் பார்

கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை



தாய் கருவோடு வாழ்ந்த
அந்நாளில் தானே
கவலை ஏதுமின்றி
கடவுள் போல் வாழ்ந்தோம் நாமே

பின் காசோடு கொஞ்சம்
கனவோடு கொஞ்சம்
நம்மை நாமே இன்று
தேடி தான் தொலைகின்றோமே

வழியில் நீயும் வளையமால்
மலையில் ஏற முடியாதே
வலிகள் ஏதும் இல்லாமல்
வாழ்கை இங்கே கிடையாதே

வாசல் தாண்டி போகாமல்
வானம் கண்ணில் தெரியாதே
காசும் பணமும் எப்போதும்
கானல் நீரை மறைந்திடுமே


கண்ணீரை போலே
வேறு நண்பன் இல்லை
கற்றுக்கொள் துன்பம் போலே
பாடம் இல்லை

உன் நெஞ்சின் சோகம் எல்லாம்
கேட்டுக் கொள்ள
உனகிங்கே உன்னை தவிர
யாரும் இல்லை

பணம் ஒன்றே எப்போதும்
வாழ்க்கை இல்லை
புரிந்தாலே இதயத்தில்
துயரம் இல்லை ...ஏ

No comments: