Saturday, April 25, 2009

இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு


சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

மகளா , மருமகளா என் வீட்டுக்கு வருவா
வெளக்கா , குத்து வெளக்கா நீ வெளிச்சம் வீசுவா
புருஷன் தோளில் , நான் ஊஞ்சல் ஆடுவேன்
புகுந்த வீட்டுக்குள்ள , நான் புண்ணியம் சேமிப்பேன்

அழகா என்ன அதட்டி நீ கட்டளை போடுவ
குளிச்சா நல்ல துவட்டி நீ முத்தமும் வாங்குவ
தினமும் தினமும் நான்தான் வந்து வெத்தல மடிக்கணும்
பாதி கடிச்சு நீ தான் மிச்சம் எனக்கு கொடுக்கணும்
அட இப்படி ஓரு ஜோடியான்னு உலகும் கண்ணு வெக்கணும் ...

அடியே , என் கொடியே உன் மடியில் இடம் கொடு
முடிஞ்ச உன் மார்பில் கொஞ்சம் முணங்க வழி கொடு
ஆஹா இரவு நேரம் வந்தா உன் மெத்தையிலே இடம் கொடு
விடியும் நேரம் ஆனா என் சேலைய நீ கொடு
கன்னியே மச்ச கன்னியே உன் கன்னத்தில் ருசி கொடு
கடஞ்ச வெள்ளி சிலையே உன் கழுத்தில் மனம் குடு
உதட்டில் குடுத்த முத்தம் அதா திருப்பித்தான் கொடு
வெக்கமும் எனக்கு வந்த நீ இரண்டுதான் கொடு

எங்க அப்பன் ஆத்தா ரெண்டு பேருக்கும்
ஆளுக்கொன்ன பெத்து கொடு


சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு
வயலுக்கு போற சனம் எல்லாம்
பச்ச நெல்லாக நம்ம பேர நடவும் செய்யுதையா ...
சந்தையில கூடும் கூட்டம் எல்லாம்
துட்டு இல்லாம , நம்ம சேதி வாங்கி போகுதையா ,,

அந்த ஆத்தங்கரையில , கலத்து மேட்டுல
நம்ம கதைய பேசித்தான் காத்தே வீசுது ...
சுத்தி போடா வேணாமா , கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்னு ஊருக்குள்ள பேச்சு

No comments: