Sunday, April 5, 2009

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே முத்தாரமே மணி முத்தாரமே


குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்

இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே
இதயத்தின் உயிரோட்டமே
இன்ப உதயத்தின் ஒலிக்கூட்டமே

என் மன வீட்டின் ஓரு சாவி நீதானே
முத்தாரமே மணி முத்தாரமே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு

தின தந்தி அடிக்கின்றதே ...
தின தந்தி அடிக்கின்றதே ...
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே
மூச்சு தீயாக கொதிக்கின்றதே
நெஞ்சில் மணமாலை மலரே
உன் நினைவென்னும் மணியோசையே
தினமணி ஓசையே

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ


ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி
ரதி என்னும் அழகிக்கும் நீ தானே ராணி
கதி நீயே எனை கொஞ்சம் கண் பாரு தேவி

ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு
ஆனந்த விகடம் சொல்லு
என்னை பேரின்ப நதியில் தள்ளு

நான் பாக்யாதிபதி ஆனேன்
உன்னாலே கண்ணே உஷா
பசும்பொன்னே உஷா

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

குமுதம் போல வந்த குமரியே
முகம் குங்குமமாய் சிவந்த என்னவோ
மனம் வண்ணத்திரை கனவு கண்டதோ

No comments: