Thursday, April 16, 2009

நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்


வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது

அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறம் ஆமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

No comments: