Thursday, April 16, 2009
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதம் தரும் வாழ்வே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே சதி நான்
நம்பிட செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளி வேஷம்
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
தன் பிடிவாதம் விடாது என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேசவிடாது
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறம் ஆமோ நிலவே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment