Tuesday, December 9, 2008

வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு உனக்கு நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு



கருப்பான கையாலே என்ன புடுச்சான்
காதல் என் காதல் பூப்பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடுச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீச முடிய செஞ்சுக்குவேன் மோதிரமா

செவப்பாக இருக்காளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையால ஆயுள்ரேக தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா

வெள்ளிக்கிழம பத்திர பன்னன்டு உன்ன பாத்தேனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே

தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ள மீன்பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் ஐயா

செவப்பாக ஆஹா இருப்பாளே ஆமா
செவப்பாக ஆ....... ஆ......

ஓ..... உருக்கி வச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு
அட நெருங்கும் போது கரண்டு போல ஷாக்கு எனக்கு

ஏ வெட்டு புலி தீப்பெட்டி போல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும் போது பத்திக்கிச்சு மனசு எனக்கு
பூமீயிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூப்போட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு

No comments: