Wednesday, December 10, 2008

கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கதான் ஆள் இன்றி செடியில் உதிரும் அடி
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பரித்திட போகுதடி
இதயம் முழுதும் விதையா விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றாய்
விருக்ஷத்தை போல நீ வளர்ந்து நின்றாய்
தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்லுகிறேன்
எப்போதும் உன் நினைவு என்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீ என்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனத்தில் மின்னல் வெட்டுதடி
உயிரில் கலந்தாய் உணர்வில் நுழைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உனை தொடர்கிறதே

தோளில் சாயும் போது தோழி நீ அடி
மடியில் சாயும் போது தாயும் நீ அடி

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய் கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உனை பார்க்கும் முன்பு நான்
காகிதத்தின் வெண்மை அடி
உனை பார்த்த பின்பு நான்
வானவில்லின் வண்ணம் அடி

No comments: