Tuesday, December 16, 2008

என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது


இடம் பொருள் பார்த்து இதயத்தை மாற்று
இது ஒரு காதல் கூத்து
விழிகளை கோர்த்து விரல்களை சேர்த்து
உயிரினில் என்னை போர்த்து
என்னை போல எவரும் உன்னை காதலிக்க முடியாது
முடியும் என்றால் கூட அவனை காதலிக்க முடியாது

உன் நகங்களில் பார்த்தேன்
என் இருபது முகங்கள்
உன் கன்னங்கள் பார்த்தேன்
என் இதழின் ரேகைகள்
காதல் என்ற மரத்தின் கீழே புத்தனாகிறேன்
போதை கொண்ட உந்தன் மடியில் பூக்களாகிறேன்
நீ பார்க்கும் திசை எந்தன் நடை பாதையே
நீ பேசும் மொழி எந்தன் அகராதியே

உன் விழிகளின் வெயிலில்
என் வேர்வை இனிக்கிதே
உன் புன்னகை நினைவில் என் தூக்கம் தொலைந்ததே
காதல் என்ற தாயின் மடியில் குழந்தை ஆகிறேன்
மழலை பேசும் மொழியில் இன்று மனிதனாகிறேன்
கனவோடு உனை காண இமை தேடுவேன்
இமையாக நான் வந்து உனை மூடுவேன்

No comments: