Tuesday, December 23, 2008

இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது


மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை
நான்கு கண்கள் பேசும் போது தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே மனதுக்கு சுகமில்லை
மலர்களை எரிப்பது முறையில்லை மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல் வார்த்தைகள் புரிவது எளிதில்லை
கண்ணில் ஆசை துடிக்குதே அன்பே அன்பே
நெஞ்சு பிடிக்குது முல்லை வெளியில் சொல்லவில்லை
வெட்க படாத பூக்களை வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கமும் சாயம் போகாதடி

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று


பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம் பெண்ணுக்கு தெரியாது
ஒரு ஆணின் கைகள் தீண்டு மட்டும் அவசியம் புரியாது
காதல் மங்கை சொன்ன வார்த்தை கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே கவிஞர்கள் கிடையாது
இரவிலே தாமரை மலராது பகலிலே அல்லியும் அவிழாது
இதய பூ எப்போது மலரும் என்று இதுவரை சொன்னவர் கிடையாது
ராஜமோஹினி ரம்பா ரம்பா
உன் எடைக்கெடை தங்கம் தர துடிக்கும் நெஞ்சம்
கைகள் தொடாமல் கண்களால் நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால் என்னை தூண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும் இன்னும் என்ன மௌனமமோ
மோதி வந்து முத்தமிட்டால் மௌனம் தீருமோ
அச்சம் தான் உன் ஆடையோ வெட்கம் தான் முந்தாணையோ
மௌனம் தான் உன் வேளியோ செம்பூவே வா வா வா வா
விழியே ஒரு வார்த்தையானால் மொழி என்பது வேண்டாமே

No comments: