Friday, December 26, 2008

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்


உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

நீயும் நானும் ஒன்று ஒன்று
நெஞ்சும் நெஞ்சும் கூடும் என்று
காதல் தெய்வம் காற்றில் சொன்னதே
புருவம் ரெண்டும் முட்டிக்கொள்ள
பருவம் ரெண்டும் கட்டிக்கொள்ள
சந்தர்ப்பங்கள் தானாய் வந்ததே

ஓ நீ என்னை எப்படி அறிவாய்
நான் உன்னை எப்படி அறிவேன்
சந்தித்து பிரிந்தோமா

அலையோடு எரியும் பூக்கள்
தரையோடு வருதல் போல
மீண்டும் நான் இனைந்தோமா

உன் கள்ள கண்களால் உயிர் கொத்தி குடித்தாய்
உன் நெஞ்ச பள்ளத்தில் ஏன் காதல் மறைத்தாய்

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

பெண்ணே உந்தன் நெஞ்சில் நெஞ்சில்
காதல் ஏதும் இல்லை என்றால்
என்னை நானே மூட்டை கட்டுவேன்

தொண்டை வரையில் காதல் வைத்து
கொஞ்சம் கூட இல்லை என்றால்
சாட்சிக்காக யாரை தேடுவேன்

காற்றோடு போகும் மேகம்
எங்கேதான் சிந்தும் என்று
யாருக்கும் தெரிவதில்லை

அகங்கார கண்ணி பெண்ணின்
அன்றாட முடிவும் என்ன
ஆணுக்கு புரிவதில்லை

ஒரு ஈட்டி எடுத்து என் நெஞ்சில் செலுத்து
உன் பேரை சொல்லுமே அதில் உள்ள எழுத்து

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா
பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

உன்னை தொட்ட உற்சாகத்தில்
விண்ணை தொட்டு மண்ணில் வந்தேன்

தொட்டு கொண்டது கனவா கனவா
விட்டு சென்றது நனவா நனவா

பிறக்கும் முன்பே சந்தித்தோமா
சொல்லு சொல்லு சொல்லு

பிறந்த பொழுதே பிரிவு உற்றோமா
சொல்லு சொல்லு சொல்லு

என்னை போல வலி கண்டாயா
இதயம் இரண்டாய் சிதறுண்டாயா
இற்று போகும் உயிர் கண்டாயா

பெண்ணின் காதல் வலியில் இன்பம்
ஆணின் காதல் பிறவி துன்பம்

No comments: