Friday, December 26, 2008

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே


மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்சநேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடி
முதன்முறை என் விரல் பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உறையும் ஸ்வீட் ட்ரீம்ஸ்
பறித்தது தூக்கத்திலே
காலைத் தேநீர் குழம்பாய்
மிதந்தது சோற்றுக்குள்ளே
கிறுக்கன் என்றொரு பெயரும்
கிடைத்தது வீட்டுக்குள்ளே

காதலே ஒருவகை ஞாபக மறதி
கண்முன்னே நடப்பது மறந்திடுமே
வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித்
தலைகீழாகத் தொங்கிடுமே
ஓ உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா

எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

என் பேர் கேட்டால் உன் பேர்
சொன்னேன் பதட்டத்திலே
பக்கத்து வீட்டில் கோலம்
போட்டேன் குழப்பத்திலே
காதல் கவிதை வாங்கிப்
படித்தேன் கிறக்கத்திலே
ஓ குட்டிப் பூனைக்கு முத்தம்
கொடுத்தேன் மயக்கத்திலே

ஓ காதலும் ஒருவகை போதைதானே
உள்ளுக்குள் வெறியேற்றும் பேய்போல
ஏனிந்தத்தொல்லை என்று தள்ளிப்போனால்
புன்னகை செய்துகொஞ்சும் தாய்போல

உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்குப் பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என்முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதிக்குதே உயிர் மிதக்குதே
அய்யோ இது எனக்குப் பிடிக்குதடா
எடை குறையுதே தூக்கம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்குதடா

No comments: