Tuesday, October 21, 2008

வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான் , சில பறவைகள் மொழிகளும் புரிவான் ,ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?




உன்னை தான் குயிலும் தேடுது குக்கூக்கூ கூ
உன்னை தான் உயிரும் தேடுது குக்கூக்கூ கூ

அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்
அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்
வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்
சில பறவைகள் மொழிகளும் புரிவான்

ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?

வா மன்னவா வா மன்னவா வா மன்னவா

நாயகனே என் நாயகனே
நாயகனே என் நாயகனே
என் கை வளை நழுவும் முன்னே
என் கண்ணீர் உடையும் முன்னே
என் உயிர் துளி வற்றிடும் முன்னே
என் ஒரு விரல் தொட்டால் என்ன?
மையல் கூறிய பிறகு
இவள் வெயில் ஏறிய சருகு
பொன் மேனி பூக்களில் உழுது
உன் மேதா விலாசம் எழுது
கை தொடாத பாகம்
தொடாது போனால் விடாது சாபம் வா வா வா

காதலனே என் காதலனே காதலனே என் காதலனே

காதல் என்பது நதிதான்
அதில் இருவரும் இரு கரை ஆனாம்
ஒரு கரை மறு கரை தொடும்
அட அது போல் தனித்தனி ஆனோம்

நாம் கைகள் நான்கும் காலம்
அது எப்போது ஒன்றாய் சேரும்
அட என் மார்பு இங்கே வாடும்
அதில் எப்போது ஈரம் சேரும்

ஒரு வாரம் போகும்முன் வருஷம் போகுதே
வயசு போகுதே வா வா வா

உன்னை தான் குயிலும் தேடுது குக்கூக்கூ கூ
உன்னை தான் உயிரும் தேடுது குக்கூக்கூ கூ

அவன் வட்ட வட்ட நிலவையும் வரைவான்
அதன் மறுபக்கம் என்ன உண்டு தெளிவான்
வண்ண மலர்களின் வலிகளும் தெரிவான்
சில பறவைகள் மொழிகளும் புரிவான்

ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?
ஆனால் பேதை உள்ளம் புரியல அவனா மேதை ?

வா மன்னவா வா மன்னவா வா மன்னவா

No comments: