Friday, October 31, 2008

உயிர் காதல் சொல் எடுத்து , நம் உயரை சேர்த்தெடுத்து , அவன் போட்டான் கையெழுத்து



எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உணைசேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா என் செல்லமே

மனசுக்குள்ளே வாசல் தெளித்து
உந்தன் பெயரை கோலம் போட்டு
காலம் எல்லாம் காவல் இருப்பேனே
உயிர் கரையிலே, உன் கால் தடம்
மனசுவரிலே, உன் புகைப்படம்
உன் சின்ன சின்ன, மீசையினை
நுனி பல்லில் கடிதிளுப்பேன்
உன் ஈரம் சொட்டும், கூந்தல் துளி
தீர்த்தம் என்று குடித்து கொள்வேன்
என் மேலே பாட்டு எழுந்து
உயிர் காதல் சொல் எடுத்து
நம் உயரை சேர்த்தெடுத்து
அவன் போட்டான் கையெழுத்து
(எத்தனை ஜென்மம் )

உன்னை பார்க்க கண்கள் இமைக்கும்
இமைக்கும் நொடியில் பிரிவு கணக்கும்
இமைகள் இல்லா கண்கள் கேட்பேனே
நீ பார்கிறாய், நான் சரிகிறேன்
நீ கேட்கிறாய் ,நான் தருகிறேன்
நீ வீட்டுக்குள்ளே, வந்ததுமே
உன்னை கட்டிப்பிடித்து கொள்வேன்
நீ கட்டிக்கொள்ள, உன்னை மெல்ல
மெத்தன பக்கம் கூட்டி செல்வேன்
நான் மறுப்பேன் முதல் தடவை
தலை குனிவேன் மறு தடவை
நான் பெறுவேன் சிறுதடவை
பின்பு தருவேன் உன் நகலை
(எத்தனை ஜென்மம் )

No comments: