Wednesday, October 15, 2008

எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன் ,உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே



வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

சொல்லால் சொல்லாதது காதல் சுகம் சொல்லில் நில்லாதது
கண்ணால் உண்டானது கைகள் தொட இந்நாள் ஒன்றானது
வண்ணப்பூ வஞ்சிப்பூ வாய்வெடித்த வாச பூ
அன்பு தேந் இன்ப தேந் கொட்டுமா
இந்தப்பூ சின்னப்பூ கண்ணிப்போகும் கன்னி பூ
வண்டு தான் வந்துதான் தட்டுமா
என்னை மீண்டும் கொஞ்சத் தூண்டும்
நாணல் போல தேகம் தன்னில் நாணம் என்னமா


வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

வந்தாள் புல்லாங்குழல் வாங்கியதை ஏந்தும் மன்னன் விரல்
மன்னன் சொல்லும் கவி மங்கைக்கு அது காதல் நீளாம்பரி
அம்மம்மா அப்பப்பா இன்பம் தரும் பாணங்கள்
எத்திக்கும் என்றைக்கும் தித்திக்கும்
மங்கை நீ கங்கை நீ வெண்ணிலவின் தங்கை நீ
உன்னைத்தான் என் கண்கள் சந்திக்கும்
எந்தன் ஜீவன் கொஞ்சும் தேவன்
உன்னையன்றி வேற இங்கு யாரும் இல்லையே

வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்த சிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லை சரம் கொண்டு சூடினான்
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்
புள்ளி வைத்தது புள்ளி போட்டான் புது கோலம் தான்

No comments: