Tuesday, October 7, 2008

நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்



சொர்ககத்தின் வாசற்படி எண்ண கனவுகளில்
பெண்ணல்ல நீ எனக்கு வண்ண களஞ்சியமே
சிந்தும் பணி துளியே என்னை சேரும் இலங்கிளியே


உன்னாலே உண்டாகும் நியாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டு அல்லவே
சிற்றண்ண வாசலின் ஓவியமே, சிந்தைக்குள் ஊறிய காவியமே
எங்கே நீ அங்கே தான் நான் இருப்பேன்,
எப்போதும் நீ தொட தோள் கொடுப்பேன்
மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்ககத்தின் வாசற்படி எண்ண கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ண களஞ்சியமே
சிந்தும் பணி துளியே என்னை சேரும் இலங்கிளியே

உன்னாலே நான் கண்ட காயங்களை
முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை
இன்றும் என்றும் அறிவேன்
மின்சாரம் போல் எனை தாக்குகிறாய்
மஞ்சத்தை போர்க்களம் ஆக்குகிறாய்
கண்ணே உன் கண் என்ன வேல் இனமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ
கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நான் இங்கு தோற்று விட்டேன் நீ என்னை ஆளுகிறாய்

No comments: