Sunday, October 26, 2008

மேடை போட்டு சொல்வதல்ல பெண்ணின் காதல் என்பது ஜாடை சொல்லும் விழியின் அசைவில் சர்வ மொழியும் உள்ளது



எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
ஓ உன்னை மூடி மறைத்தாய் பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது வாய்வெடீத்தாய் உண்மை நீ உரைத்தாய்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் உன்னை எண்ணில் விதைத்தாய்
உயிரை ஊற்றி வளர்த்தாய் ஒரே புள்ளியில் நம் உள்ளம் பூ பூத்ததெ
அதில் தேன் வார்த்ததே

மேடை போட்டு சொல்வதல்ல பெண்ணின் காதல் என்பது ஜாடை சொல்லும் விழியின் அசைவில் சர்வ மொழியும் உள்ளது
ஓ இரு விழி அசைவிலே இதயம் கழன்று போனது இன்னொரு பார்வையில் இதயம் என்ன ஆவது
அட நெஞ்சில் எழுந்த காதல் எண்ணம் வெளியே சொல்ல முடியுமா
தரையில் விழுந்த நிழல்கள் என்ன சத்தம் போட்டு கதருமா
ஓ நீலா படகில் நீயும் நானும் உலா போவோம் பாடி வா

உன்னை எண்ணில் ஆ! உன்னை எண்ணில் விதைத்தாய்
உயிரை ஊற்றி வளர்த்தாய்
உன்னை மூடி மறைத்தாய் பூவின் பின்னால் ஒளிந்தாய்
காதல் உன்னை உடைத்த போது வாய் வெடித்தாய் உண்மை நீ உரைத்தாய்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம்எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே

ஓ இரண்டு சிறகு இருந்த போதும் பறக்கும் வானம் ஒன்று தான்
இரண்டு இதயம் மோதும் போதும் இருக்கும் காதல் ஒன்று தான்
ஒவ்வொரு மொழியிலும் வேறு வேறு வார்த்தை தான்
வார்த்தைகள் மாறலாம் பூக்கள் என்றும் பூக்கள் தான்
ஓ காலம் மாறும் நிறங்கள் மாறும் காதல் என்றும் காதல் தான்
கண்கள் இருந்தால் காதல் தெரியும் கண்டு கொண்டதும் இன்றுதான்
முத்தம் போட்டால் மொத்தம் அழியும் வெட்கம் என்னும் கோடு தான்
உந்தன் மூச்சில் என் சுவாசம் கலந்து உலவும் நேரம் தான்
எந்தன் நெஞ்சில் உன் எண்ணம் நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் பாயுமாம் உன் எண்ணம் பாயுமாம்
நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே
எந்தன் நெஞ்சில் ஆ ஆ உன் எண்ணம் ஆ ஆ நீயும் நானும் ஒன்றானோம் வேறில்லையே

No comments: