Tuesday, November 18, 2008

மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் , பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா


தூது வருமா?...தூது வருமா?
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா?...தூது வருமா?
கனவில் வருமா?...கலைந்து விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தெனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே ட்ராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே
பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா

(தூது வருமா)

கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சான் போல் நீயும் வந்தாய்
சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

No comments: