Monday, November 3, 2008

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை


உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை எல்லாம் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

No comments: