Thursday, November 13, 2008

நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்



நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மை தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ விழியால் விழியை பறிதாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய் ஒரு அதிஸைய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குதித்தாய் இந்த உலகை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்பு கொண்ட உயிர்கள் கட்டி கொண்ட பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ மெதுவா நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தாய் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் கட்டி கொண்டு பழகும் புத்தம் புது மிருகமும் தெரிகிறதே

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

No comments: