Sunday, March 22, 2009

உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளம்


அஹா ஹ்ம்ம்ம்ம்ம்....
அஹா ஹா....
ஹ்ம்ம்ம்ம்ம ஹ்ம்ம்ம்ம்ம் ..
ஹ்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம் ..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றிபோனாய்
பால் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்
ஹ்ம்ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே


கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானம் என் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே என் அன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்று போனேனே
வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளம்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அணலாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே

கள்வா ஹே கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காற்று நம் பூமிதனை விட்டு போகாதே
ஆகாயம் நிறம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே
ஏ மஞ்ச தாமரையே என் உச்சதாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறேதே


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றிபோனாய்
பால் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் பழிக்கிறாய்

அஹா ஹ்ம்ம்ம்ம்ம்....
அஹா ஹா....
ஹ்ம்ம்ம்ம்ம ஹ்ம்ம்ம்ம்ம் ..
ஹ்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம் ..

No comments: