Friday, March 6, 2009

திருடா திருடா என் இதயத்தை திருப்பிக் கொடு


கருடா கருடா என் காதலை சொல்லி விடு
திருடா திருடா என் இதயத்தை திருப்பிக் கொடு

அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் எரிப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் கிரந்குது
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
கருடா ......கருடா .....
கருடா .....கருடா .....

மனமோகினி என் மடியில் வந்தால்
அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தால் நீ
இனி நம் பிள்ளைகள் வரும் பேரணி
எப்போதுமே அட என் மீது நீ
இரு கை வைத்து செய்யும் பணி
இன்ப கனவுக்குள்ளே எனை சிறைவைதிடும்
அந்த காலையில் நீ கலை மாமணி
உண்ணாத உணவுக்கு சுவை ஏதம்மா
கண்ணோடு இமை சேர தடை ஏனம்மா
முள்ளொன்று இல்லாமல் கடிகாரமா
கல்யாணம் ஆகும் முன் அதிகாரமா ?
ஆரணி பட்டு நீயடி நம் கல்யாணம் தானே இனி

கருடா கருடா என் காதலை சொல்லி விடு
திருடா திருடா என் இதயத்தை திருப்பிக் கொடு

செய்கூலியும் இல்லை சேதாரமும் இல்லை
கோளாறு தங்கம் இது
கை வைத்து பார் இந்த பெண்ணுக்குள்ளே
அட பொய்யான பாகம் எது
கண்ணே உன்னை இங்கு எண்ணாத நாள்
நான் உண்ணாத நாள் அல்லவா
அன்பே அன்பே உன் அங்கம் எங்கும்
என் அடையாள குறி போடவா
தீராத சந்தேகம் உண்டாகுமா
ஆராய்ச்சி செய்யத்தான் என் தேகமா
இல்லாத சொல்லுக்கு பொருள் ஏதம்மா
என் ஆசை முத்தத்தில் முடிவேதும்மா
பூங்கிளி உன் பூங்கிளி
இந்த பூவுக்குள் பன்னீர் தெளி

கருடா கருடா என் காதலை சொல்லி விடு
திருடா திருடா என் இதயத்தை திருப்பிக் கொடு
அட உன் மனம் ரகசியப் புயலா விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் எரிப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் கிரந்குது
ராரி ஆயாரோ இது காதல் ஆராரோ
கருடா ......கருடா .....
கருடா .....கருடா .....

No comments: