Sunday, March 1, 2009

உயிரெல்லாம் உதற என் நெஞ்சம் அதிர உன் காதல் சொல்லி மிரட்டி விட்டாய்


ஓஹோ ஹோ ஹோ
அஹா ஹா ஹா

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
முரட்டு பார்வை பார்த்தே எனை முழுதும் மிரட்டி விட்டாய்
இதயம் இரண்டை மாற்றி எனை நொடியில் மிரட்டி விட்டாய்
உயிரெல்லாம் உதற என் நெஞ்சம் அதிர
உன் காதல் சொல்லி மிரட்டி விட்டாய்

என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்து தான்
கொஞ்சம் என் மூச்சை நிறுத்தி விட்டாய்
என் வீட்டு சுவர் ஏறி குதித்து தான்
வந்து எனை பார்த்து மிரட்டி விட்டாய்
அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டி விட்டாய்
சுகமான இம்சை நீ தந்து மிரட்டி விட்டாய்
நம் பேரை கையிலே எழுதி நீ
காட்டாமல் மிரட்டியதேனோ ?
உன்னோட முகவரி கேட்டால்
என் மனதை காட்டியதேனோ ?
என் அருகில் நீதான் இல்லாத போதும்
உன் நினைவில் நீதான் மிரட்டி விட்டாய்

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்


நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் பொது
நீயும் அழுதே தான் மிரட்டி விட்டாய்
என் அழுகை பொய் என்று நீ அறிந்துதான்
எனை மேலும் நீ மிரட்டி விட்டாய்
ஓரு செல்ல பேரில் எனை அழைத்து
மிரட்டி விட்டாய்
சிறு பிள்ளை மடி தூங்கி
மிரட்டி விட்டாய்
உன் கண்ணில் தூசி என சொல்லி
எனை சும்மா நீ மிரட்டியதேனோ ?
சும்மா நான் சொல்வது தெரிந்தும்
அதை நீ வந்து ஊதியதேனோ ?
சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை
ரெண்டும் நீ செய்து மிரட்டி விட்டாய்


பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
முரட்டு பார்வை பார்த்தே எனை முழுதும் மிரட்டி விட்டாய்
இதயம் இரண்டை மாற்றி எனை நொடியில் மிரட்டி விட்டாய்
உயிரெல்லாம் உதற என் நெஞ்சம் அதிர
உன் காதல் சொல்லி மிரட்டி விட்டாய்

கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
தன்னானா நானா
தனானா நானா
தன்னானா நானா
தனானா நானா

No comments: