Wednesday, March 25, 2009

நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை யாருக்கும் அமைவதில்லை


ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேறை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும் பொது
அன்பே என்ன செய்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

No comments: