Saturday, March 28, 2009

அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா


அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்
கதையெழுதிப் பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ


கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்தத் தெய்வம் சொந்தம் என்று கூறிப் பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளையுள்ளக் கிள்ளை ஒன்று நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ பழங்கதையோ விடுகதையோ எது இன்று


அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்
கதையெழுதிப் பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை

No comments: