Tuesday, March 24, 2009

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஒரு அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி


அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

No comments: