Friday, March 6, 2009

உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம் வருவது வருவது எப்படி


உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயென புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி

உன் பட்டு கன்னம் புத்தகம்
அதில் உதடுகள் எழுதுவதெப்படி
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா
அது பகலிலும் ஒளிர்வது எப்படி
உன் வீதி சேர்ந்ததும் வருகிற
பதட்டம் குறைப்பது குறைப்பது எப்படி
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்
வருவது வருவது எப்படி
என் வாழ்க்கையா ...என் வேட்கையா ..
ரெண்டாகவும் தெரிந்தாயே ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உன் எச்சில் முத்தம் சம்மதம்
அது தினசரி தொடர சம்மதம்
உன் உச்சுகொட்டல் சம்மதம்
அது உயிர் குழி பறிக்க சம்மதம்
உன் காதின் ஓரமாய் புரளும் முடியை
காலைக் கோடி சம்மதம்
உன் ஈர சேலையில் வழியும் துளி போலே
உருள நானும் சம்மதம்
இனி என் ஞாபகம் ...உன் பூ முகம் ..
கண்ணாடி போலே எனை காட்டும் ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

No comments: