Saturday, March 14, 2009

ஒ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா


தனனா.... அஹா அஹா அஹா
தனனா.... அஹா அஹா அஹா
தனனா... தனனா... தனனா...
அஹா அஹா அஹா

தனனா...
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
தனனா...
என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
தனனா...
உன் சீதனங்கள் என்ன நூதனம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
விடிய விடிய கேட்குதையா உனது கீர்த்தனம்
சொர்க்கம் தாண்டி செல்லுமம்மா எனது சொப்பனம்
போக போக காண வேண்டும் புதிய தரிசனம்
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
தனனா...


தானன தன்னானன ..
தஜும் தஜும் ..
தானன தன்னானன..
தஜும் தஜும் ..

ஒ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
மெய்மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா

ஒ கன்னி புறாவே கால் முளைத்த நிலாவே
மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
மல்லிகை மொட்டை மன்னவன் கிள்ளி முடித்தானே
மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடிதானே
வல்லவனே
தந்தனனா..
நல்லவனே
கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

தனனா..
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
மெல்ல எந்தன் காதோடு நீ பாடு காதல் வரி
ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
கட்டிப்புடி
தந்தனனா..
தொட்டுப் படி
மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
உன் சீதனங்கள் என்ன நூதனம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

லல லால‌லா லால்லா லால்லா லா
லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

No comments: