Sunday, March 1, 2009

முறைச்சு போற சின்னவனே சிரிப்பில் என்னை தின்னவனே


பம்பர கண்ணு பச்ச மிளகாய்
இஞ்சி மொரப்பா இலக்க வச்சான்
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனா சிலிர்க்க வச்சான்
எட்டு சானு ஒசரமா
எதிரில் நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போல என்னை
கட்டுறியே எதுக்குமா எதுக்குமா ?

கும்மிடிபூண்டிக்கு வருவியா ?
குளித்தலைக்கு வருவியா ?
இத்துனூண்டு கன்னத்தில
இச்சு நூறு தருவியா ?
ஹே திண்டுக்கலுக்கு வருவியா ?
திருநெல்வேலிக்கு வருவியா ?
குட்டியூண்டு மச்சதில
அல்வா கிண்டி தருவியா ?
இளச்ச எலந்த பலமே நீ ஏத்துக்கிட்டா சிரிப்பேன்
அரைச்ச மாதுழம் பழமே நீ அனுசரிச்சா இருப்பேன்
கிடைச்ச முந்திரி பழமே நீ கேட்டதெல்லாம் ஜெயிப்பேன்
வெடிச்ச வெள்ளரி பழமே உன் வெக்கம் பார்த்து எடுப்பேன்
என்ன சொல்ல என்ன சொல்ல
காதல் வந்தா ஹே கசக்குமா ? இனிக்குமா ?

பம்பர கண்ணு பச்ச மிளகாய்
இஞ்சி மொரப்பா இலக்க வச்சான்
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனா சிலிர்க்க வச்சான்
எட்டு சானு ஒசரமா
எதிரில் நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போல என்னை
கட்டுறியே எதுக்குமா எதுக்குமா ?


கண்ணு ரெண்டும் அந்துருண்டை
கன்னம் ரெண்டும் நெய் உருண்டை
ஒத்து போனா கச்சேரிக்கு நீயும் நானும் எள்ளுருண்டை
முறைச்சு போற சின்னவனே சிரிப்பில் என்னை தின்னவனே
முத்து போன்ற நெஞ்சுக்குள்ளே முட்டி போட்டு நின்னவனே
கலங்கடிக்கிற கனியே நீ காத்திருப்பாய் அதுக்கு
விளக்கனைகிற வயசே ஏன் வலையை வீசுற எனக்கு
தவிதவிக்கிற வயசே நான் தல்லாகுளம் காத்து
என்ன சொல்ல என்ன சொல்ல காதல்னா
கொடுக்குமா எடுக்குமா ?


பம்பர கண்ணு பச்ச மிளகாய்
இஞ்சி மொரப்பா இலக்க வச்சான்
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்
ஜிவ்வுனா சிலிர்க்க வச்சான்
எட்டு சானு ஒசரமா
எதிரில் நிக்கும் வயசம்மா
கட்டு சோறு போல என்னை
கட்டுறியே எதுக்குமா எதுக்குமா ?

No comments: