Tuesday, March 3, 2009

மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால் உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன்


கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதல்முதல் இரண்டையும்
பார்த்தவன் நான்தானே
ஏய் ஹேய் ஏய்

காமமும் காதலும் வேரு இல்லை
எவருக்கும் இதுவரை தெரியவில்லை
முதல்முதல் இரண்டையும்
புரிந்தவள் நான்தானே
ஏய் ஹேய் ஏய்

தலை கீழ் தெரியுதே வானம் ..வானம்
தலை மேல் உருளுதே பூமி .. பூமி
கலராய் தெரியுதே காற்று .. காற்று
எல்லாம் காதலே காதலே காதலே

கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதல்முதல் இரண்டையும்
பார்த்தவன் நான்தானே
ஏய் ஹேய் ஏய்

ஆடைகள் அணிந்து அருவியும் நடந்தால்
உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன்
மீசையும் முளைத்து மின்னலும் நடந்தால்
உன்னை போல் இருக்கும் என்றுணர்ந்தேன்
நீ சிந்திய மௌனத்தை சேர்த்துதான்
இசைக்கிறேன் நான் ஒரு இன்னிசை
நீ செய்யும் வன்முறை ரசித்துதான்
நான் கூட கற்கிறேன் பண்ணிசை
உன் மென்மையை விரும்புதே என் மனம்
போர்க்களம் புகுந்திட வேண்டாம்
உன் வன்மையை விரும்புதே பெண்மைதான்
அஹிம்சையாய் மாரிட வேண்டாம்
ஒஹோ ஒஹோ ...
மெல்லினம் என்பது பெண்மை
வல்லினம் என்பது ஆண்மை
இடையினம் என்பது மென்மை
இதுதான் உண்மையே

முதல் முறை உனை நான் பார்த்ததிலிருந்து
இது வறை எனை நான் பார்த்ததில்லை
உனை கண்ட இரவில் கரைந்ததிலிருந்து
இதுவரை இமைகள் மூடவில்லை
உன் நிழலிலும் வர்ணங்கள் தெரியுதே
இது என்ன அதிசயம் சொல்லிடு

இரவெல்லாம் பகலாய் தோணுதே
இது என்ன ரகசியம் சொல்லிடு
நீ புன்னகை சிந்திடும் நொடிகளில்
நான் சிதரிப் போகிறேன் அள்ளிடு
உன் நுனி விரல் தீண்டிடும் நொடிகளில்
பொசுக்கென்று மலர்கிறேன் கிள்ளிடு
ஒஹோ ஒஹோ .....
அழகிய வன்முறை செய் செய்
அதில் கொஞ்சம் இம்சைகள் வை வை
அதுதான் காதலில் மெய் மெய்
அதில் இல்லை பொய்யடி

கடவுளும் காதலும் வேறு இல்லை
இதுவரை பார்த்தவர் யாருமில்லை
முதல்முதல் இரண்டையும்
பார்த்தவன் நான்தானே
ஏய் ஹேய் ஏய்

No comments: