Saturday, February 7, 2009

மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்மதனே உன் பெயரை சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே



தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

களவு கொண்டோடிய கண்களின் தூக்கத்தை
என்னிடம் கொடுத்துவிடு..
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்துவிடு..
ஓ.. ஆயிரம் தேவைகள் கைவசம் உள்ளது
அனுமதி தந்து விடு..
ஆடையும் ஐயமும் ஓரத்தில் தூங்கட்டும்
வன்முறை முத்தம் கொடு..
இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியே இருக்கட்டுமே
நடந்து வரும் சித்திரமே
நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யார் இதழில் சுவை அதிகம் பார்போமே..

தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா


தினம் தினம் ஓரிடம் உதிக்கிறபோதும் சூரியன் புதியதடி..
தினம் தினம் ஓரிடம் சேர்க்கிறபோதிலும் சுகவகை புதியதடி..
இருவது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று
சாயுது இளைய கொடி
இருவது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று
ஏங்குது பழையபடி..
ஆடை சரிந்தால்.. உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
மார்பழகு இந்திரனே.. மஞ்சள் நிற மன்மதனே
உன் பெயரை சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓர் இரவில் ஏழ் பிறவி வாழ்வேனே.

தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

No comments: