Tuesday, February 24, 2009

வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாக இந்நாள்


எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்...

எந்தன் நெஞ்சில் ஹோய் ...
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா


சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே..
வலிகளும் குறைந்திடும் மானே...
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே...

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீதானா? வா....

No comments: