Thursday, February 26, 2009
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நானமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி..
இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்..
இளமாலையில்..
அருகாமையில்..
வந்தாடும் வேளை இன்பம் கோடியின்று
அனுபவம் சொல்லவில்லையோ..
(என் மன்னவன்..)
என் கண்மணி..
மெதுவாக உன்னை கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தறவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் நேரமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ
(என் கண்மணி..)
(என் மன்னவன்..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment