Thursday, February 26, 2009

ஓடையில் நான் அமர்ந்தேன் அதில் என் முகம் பார்த்திருந்தேன்



நிக்கட்டுமா போகட்டுமா
நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே
தாவணி போல் சேலை வந்து
சேலை தொடும் வேளை வந்து தாவுதடி
சொல்லட்டுமா தள்ளட்டுமா
சோலைக் கருங்குயிலே சோலைக் கருங்குயிலே

ஓடையில் நான் அமர்ந்தேன்
அதில் என் முகம் பார்த்திருந்தேன்
ஓடையில் பார்த்த முகம்
அது உன் முகம் ஆனதென்ன
வாடையில் மாறிடும் பூவினைப் போல்
என் நெஞ்சமும் ஆனதென்ன
தேரடி வீதியிலே ஒரு
தோரணம் நான் தொடுத்தேன்
தோரண வாசலிலே ஒரு
சோடியை கைப்பிடித்தேன்
பிடித்த கரம் இணைந்திடுமா
இணைந்திடும் நாள் வருமா?
(சொல்லட்டுமா..)
(நிக்கட்டுமா..)

ராத்திரி நேரத்திலே ஒரு ராகமும் கேட்டதடி
கேட்டது கிடைக்குமென்று ஒரு சேதியும் சொன்னதடி
மல்லிகை பூச்செடி பூத்தது
என் உள்ளமும் பூத்ததடி
அம்மனின் கோவிலிலே
அன்று ஆசையில் நான் நடந்தேன்
உன் மன கோவிலில்
மெட்டி ஓசையில் பின் தொடர்ந்தேன்
நாடியது நடந்திடுமா
நடந்திடும் நாள் வருமா?
(நிக்கட்டுமா..)

No comments: