Thursday, February 26, 2009

உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்


தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்போம் என்று மெய் தேட தொடங்கியதே

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒளிந்தாயோ?
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா?
நான் நடந்து கொண்டே எறிவது உனக்கு சம்மதமா?
அடி உனக்கு மனதிலே என் நினைப்பு இருக்குமா?
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்ததிலே
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விழும்பி அழுதது தான்
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை
மெல்ல சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன்
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
(காதல் மழையே..)

தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?
தேடி தேடி தேடி தேடி தீர்ப்போமா?

தேடல் தொடங்கியதே மெய் தேடல் தொடங்கியதே
சங்கில் குடித்துவிட ஒரு சமுத்திரம் நினைப்பது போல்
அங்கம் நிறைந்துவிட என் ஆவி துடித்தது தான்
தேடி கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடி பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே வாராய்
உயிரே வாராய்
என் உயிரே வாராய்
காதல் காதல் காதல்
(காதல் மழையே..)

No comments: