Thursday, February 26, 2009

இரண்டு பேரை ஒன்றாய் எழுதிப்பார்க்கும் இன்பம்


உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெலி
நனையாத பூவனம்
உதிர்கின்ற பொன்முடி
கலைகின்ற சிறுநகம்
சிங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
(உடையாத..)

அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்
முத்தம் வைத்த பின்னும்
காய்ந்திடாத ஈரம்
எச்சி வைத்த பின்னும்
மிச்சமுள்ள பாலும்
கன்னம் என்னும் பூவில்
கைகள் செய்த காயம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்..
(உடையாத..)

கண்கள் சொல்லும் ஜாடை
கழுத்தில் கோர்த்த வேர்வை
அள்ளிச் செல்லும் கூந்தல்
ஆடை தூக்கும் காற்று
மொட்டு விட்ட பாகம்
தொட்டு பார்த்த சேலை
முகத்தின் மீது ஆடை
மோதிச் சென்ற மோகம்
இரண்டு பேரை ஒன்றாய்
எழுதிப்பார்க்கும் இன்பம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்
ஆ&(உடையாத..)

No comments: