Saturday, February 7, 2009

கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோடு காதல் பசி போக்கிறேன்



மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

மலைகாற்று வந்து தமிழ் பேசினால்
மழை சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்


புல்லோடு இரவில் பனி தூங்கும்
சொல்லோடு கவியின் பொருள் தூங்கும்
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே

கடல்கொண்ட நீளம் கரைந்தாலுமே
குரல்கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே
முடியாது கண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே

மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

இடையோடு இரண்டு கரம் சேர்கிறேன்
என்னென்ன என்று சரி பார்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்கிறேன்
இடைவேளை இல்லை , தொடருவேன்

கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோடு காதல் பசி போக்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வதரியேன்
இனி என்ன செய்வது ஹ்ம்ம் ம்ம்ம் ........

மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

மலைகாற்று வந்து தமிழ் பேசினால்
மழை சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்

No comments: