Wednesday, February 18, 2009

என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்



தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்
அம்மம்மா...
தேவர் கடல் கடைந்த அமுதம்
அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம்
மூவர் வடித்த தமிழ் பதிகம்
அந்த மோஹனன் தந்த சுகம் அதிகம்
அம்மம்மா...
ராத்திரி பூக்களுக்கு ராஜா
என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
சாத்திர கீதை சொன்ன கண்ணன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன்
அம்மம்மா...
என்னடி நாணம் என்று அணைப்பான்
நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான்
தன்னந்தனிமையிலே அழைப்பான்
நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான்
அம்மம்மா...
ஆலிலை மேகலைகள் ஆட
பொன் அரசிலை நாடகங்கள் கூட
நாலு குணங்களிலே நான் வாட
அடி நாயகியே என்றவன் நாட
அம்மம்மா...

No comments: