Tuesday, February 24, 2009

ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!


கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!


கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மங்கையின் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் என்னருகே...!


நீலம் பூத்த ஜாலப்பார்வை மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் நீயா? நானா?
கள்ளிருக்கும்
பூவிது பூவிது
கையணைக்கும்
நாளெது நாளெது
பொன்னென மேனியும்
மின்னிட மின்னிட
மெல்லிய நூலிடை
பின்னிட பின்னிட
வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...
நான்...

ஆசை தீர பேச வேண்டும். வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா! மெதுவா!
பெண் மயங்கும்
நீ தொட நீ தொட
கண்மயங்கும்
நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம்
பொங்கிட பொங்கிட
அங்கங்கள் யாவிலும்
தங்கிட தங்கிட
தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?
நீ....!


கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பாத்திருந்தேன்
கண்விழி தாமரை பூத்திருந்தேன்
என் உடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் மன்மத நாடகமே!
அந்திப் பகல் கன்னி மயில் உன்னருகே...!

No comments: