Thursday, February 26, 2009

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேளம் கொட்டி மேடை கட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம


காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே
மேள தாளம்..ஹோ ஹோ ஹோ
காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே
மேள தாளம்..ஹோ ஹோ ஹோ

காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஹோ ஹோ ஹோ
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஹோ ஹோ ஹோ

பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஊர்கூடியே உறவானதும் தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)

No comments: