Monday, September 22, 2008

நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே


கண்ணுக்குள்ளே காதலா கண்டதும் நெஞ்சில் தென்றலா
என்னை எதோ செய்கிறாய் என்னில் எதோ கொய்கிறாய்
மன வயல் எங்கும் இன்று மௌன மழை பெய்கிறாய்
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்
நான்கு கண்கள் உள்ள ஜீவன் காதல் ஒன்றுதான்
கண்டு கொண்டேன் நானும் இங்கு உன்னால் இன்று தான்

ஊரறிந்த சேதி காதல் உயிரை வாங்கும் வியாதி
அதை வரும் முன் தடுக்கும் தடுப்பூசி உலகில் இல்லையே
உன்னை பற்றி பாட தமிழில் எங்கு வார்த்தை தேட
அட பதினெட்டு மெய்யும் பன்னிரு உயிரும் போதாது அல்லவா
நீ ஆசை மொழியின் அரங்கம் தான்
நீ நகர்ந்தால் நகரும் நகரம் தான்
நீ ஆண்கள் ஜாதியில் சைவம் தான்
உன் அசைவால் நானே அசைவம் தான்
தலைகேரும் போதை தடுமாறும்


பெண்ணே காவல் நிலையம் சென்று
தூக்கம் களவு போச்சு என்று
என் விழிகள் இரண்டும் யார் யார் மீதோ குற்றும் சாற்றுமே
உன்னை பற்றி மெல்ல நான் தான் உளவு பார்த்து சொல்ல
அட உன்னை பிடித்து காவல் துறை தான் கூண்டில் ஏற்றுமே
என் இமையை மெதுவாய் வருடாதே என் துயிலை தினமும் திருடாதே
நீ விழியால் மனதை உழுதாயே ஒரு விதையாய் நீயே விழுந்தாயே
உயிர் காதல் பூவே நீ தானே வாழ்வே

No comments: