Monday, September 22, 2008

கண்ணன் கொண்ட ராதை என ராமன் கொண்ட சீதை என



நன்றி சொல்ல உனக்கு வார்த்தையில்லை எனக்கு நான் தான் மயங்குறேன் ,
காலம் உள்ள வரைக்கும் காலடியில் கெடக்க் நான் தான் விரும்புறேன் ,
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தாலே நீ கெடைச்சே ,
பசும்பொன்ன பித்தலையா தவறாக நான் நெனச்சேன் ,நேரில் வந்த ஆண்டவனே
ஊர் அறிய உனக்கு மாலையிட்ட பிறகு எம்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்

செவ் இளணி நான் குடிக்க சீவி அதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர் தான் ,
கள்ளிருக்கும் தாமரையே கை அணைக்கும் வான் பிறையே
உள்ளிருக்கும் நாடி எங்கும் உந்தன் உயிர் தான் ,
இனி வரும் எந்த பிறவியிலும் உனை சேர காத்திருப்பேன் ,
விழி மூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் ,
உன்னை போலே தெய்வமில்லை உள்ளம் போலே கோவிலில்லை ,
தினந்தோறும் அர்ச்சனை தான் எனக்கு வேற வேலையில்லை ,


வங்ககடல் ஆழம் என்ன வல்லவர்கள் கண்டதுண்டு ,
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புகந்த வானம் எல்லையே
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா ,
நடக்கையில் உந்தன் கூட வரும் நிழல் போலே நானல்லவா ,
கண்ணன் கொண்ட ராதை என ராமன் கொண்ட சீதை என
மடி சேர்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே

No comments: