Monday, September 22, 2008

சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை


சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்
நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்
உன் ஆயுள் காலம் தீரும்பிோது என் ஆயுள் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்

விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்
நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்
நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்
என் தோளில் நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்
நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்
நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்
இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேந்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்

பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்
உன் நெற்றி வருட கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்
நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்
நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்
நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன், நான் என்னை தந்திடுவேன்
உள்ளம் தந்திடுவேன், நான் உயிரை தந்திடுவேன்

No comments: