Monday, September 22, 2008

ஒற்றை குயிலாய் உன் நினைவை தின்று பிழைக்கிறேன்


மனசே மனசே எதனால் மழைனால் முகிலாய் அழுதாய்
மழையில் நுரையாய் உடைந்தாய்
மனசே மனசே எதனால் எதனால் மௌன சிறையில் கிடந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
உன் காதல் புறா அவள் உனக்கில்லையா அவள் இல்லாவிடில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்கை எதற்கு தேவையா

காதல் சிறகை கொண்டு பறக்க சொன்னது விழியே
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே
அற்றை திங்கள் அன்னிலவில் உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்
ஒற்றை குயிலாய் உன் நினைவை தின்று பிழைக்கிறேன்
சிலருக்கு காதலை பிடிப்பதில்லை செடி என்றும் அடை மழை பார்ப்பதில்லை
காதல் என்றால் வலி தானே தவணை முறையில் இறந்தேனே
நிலவினில் உன் முகம் தினம் தினம் தோன்றிடும் தீயள்ளி வீசிடுமே

மனசே மனசே எதனால் மழைனால் முகிலாய் அழுதாய்
மழையில் நுரையாய் உடைந்தாய்
மனசே மனசே எதனால் எதனால் மௌன சிறையில் கிடந்தாய்
மலையை தனியே சுமந்தாய்
உன் காதல் புறா அவள் உனக்கில்லையா அவள் இல்லாவிடில் உயிர் கசப்பில்லையா
காதல் இழந்து வாழ்கை எதற்கு தேவையா?


இதயம் இன்னும் துடிக்கும் காரணம் கேளு கண்ணே
நெஞ்சில் சட்டை பையில் உந்தன் புகைப்படம் பெண்ணே
உன்னை போலே யாரேனும் என் எதிரே போனால் வலிக்குதடி
சாலை ஓர கடையினிலே உன் பெயரை படித்தால் வலிக்குதடி
நதிகளின் நுரைகளில் உன் கொலுசு சூரியனாய் சுழலுது என் மனசு
உயிரே உயிரே வருவாயா ? உயிரை காவல் புரிவாயா ?
காதல் மதுவை குடித்தவன் நிலைமை ஐயோ அது கொடுமை

No comments: