Monday, September 22, 2008

தனியாய் எனக்கொரு முகவரி ஏது? நான் உன் நிழலாய் போனேன்



கேட்டேனா? உன்னை கேட்டேனா? என்னை காதல் செய் என்று கேட்டேனா?
மாட்டேனா? தர மாட்டேனா? என்னை நானாக தர மாட்டேனா?
எனை தொட எனை தொட விரல்கள் ஆச்சோ விழி
விழி தொட விழி தொட விலகி போச்சோ மொழி
வர வர வர வர இளைக்கிறேன் ஏனடா?

தீக்குள் விரலை வைத்தேன் தித்தித்தாய் அன்பே நீதான்
முண்டாசு கவிஞன் சொன்ன கன்ணாமாவா?
நான் கற்ற அறிவியலில் உன்னை போல் அதிசயம் இல்லை
திக்குற்று நிற்குது இந்த விஞ்ஞானம் தான்
நான் தான் அந்த ஐந்ச்டீனா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே
நீ தான் புது விண்மீனா இந்த வையத்தை விட்டு வானம் போகாதே

***கேட்டேனா? உன்னை கேட்டேனா? என்னை காதல் செய் என்று கேட்டேனா? ***

நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தை தானோ காதல்?
சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதை தானோ காதல்?
இலக்கிய கனியை ஆதாம் தின்றான் விளைந்தது அன்றே காதல்
இலக்கிய வடிவில் கய்யாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல்
தண்ணீரில் கல்லெறிந்தால் உண்டாகும் வட்டம் போலே
கண்ணா நான் கண்டேன் என்னுள் வாட்டங்களே
கண்ணே ஒரு கல்லை போல கண்ணை நான் விட்டெறிந்தேன்
உண்ட்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே

***கேட்டேனா?உன்னை கேட்டேனா?என்னை காதல் செய் என்று கேட்டேனா?***

சிக்கி முக்கி கற்கள் கொண்டு உண்டாகி வைப்பததிந்த தீயே
வத்திகுச்சி உயிரில் கொண்டு தீமூட்டி விட்டத்தென்ன நீயே
காற்றிளினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே
தனியாய் எனக்கொரு முகவரி ஏது? நான் உன் நிழலாய் போனேன்
உன் பேரை சொல்லி சொல்லி உமிழ் நீரும் தமிழ் நீராச்சு
பிறகென்ன என்னை பற்றி கவிதை பாடு
கவிதைக்குள் நிற்காதம்மா கண்ணே உன் சௌந்தரியங்கள்
உன்னை போல் பொய்கள் சொல்ல உலகில் யாரு?

***கேட்டேனா? உன்னை கேட்டேனா?என்னை காதல் செய் என்று கேட்டேனா?***

No comments: