Monday, September 22, 2008

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண


நில்லடி என்றது உள்மனது..
செல்லடி என்றது பெண் மனது..
ஒளிதரும் நிலவுக்கு இரவு எதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உன்னை அணைப்பேனே இரவு எதற்கு..

நில்லடி என்றது உள் மனது..

சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி
பக்கம் வா வெக்கம் என் நீ சரி பாதி
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்
கிரங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்
கங்கை கரை ஓரம் அங்கு பாட்டு சொல்லக்கூடாதா
மங்கை அந்த மாலை பொழுதில் மயங்குவேனே தானாக
ஈர் உடல் இனி ஓர் உயிர் என வாழ போகும் காலமே

நில்லடி என்றது உள் மனது..
செல்லடி என்றது பெண் மனது..

இருவிழி மலர்ந்தது உன் முகம் காண
இடைவெளி ஆனது இதற்காக தானா
வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்
மன்னவா அருகில் வா அது ஒன்றே போதும்.
கண்ணும் கண்ணும் கலந்ததாலே கண்ணன் மனம் கவி பாட
இன்னும் இன்னும் வேண்டும் என்று ராதை மனம் எனை தேட
ஒரு நாளிலே பல காலங்கள் நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே

நில்லடி என்றது உள் மனது..
செல்லடி என்றது பெண் மனது..
ஒளிதரும் நிலவுக்கு இரவு எதற்கு
இரவிலே அல்லியை அணைப்பதற்கு
நான் உனை அணைப்பேனே இரவு எதற்கு..

No comments: