Monday, September 22, 2008

அண்டமெல்லாம் நின்ற போதும் கொண்ட காதல் கொள்கை மாறாது



வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானமுள்ள ஊமை போல தானம் கேட்க கூசி நின்றேனே
முகம் கண்டு நிறம் கண்டா நேசம் நான் கொண்டேன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

அட கை நீட்டும் தம்பியே எனை கட்டிவைத்தாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே
முகம் கண்டு நிறம் கண்டா நேசம் கொண்டஎன்
அவள் நிழல்கண்டு நிழல் கண்டே நான் பாசம் கொண்டேன்
வெண்ணிலாவின் தேரில் ஏறி காதல் தெய்வம் நேரில் வந்தாளே

கால் அழகும் மேல் அழகும் கண் பொங்கக் கண்டேன்
அவள் நூல் அவிழும் இடை அழகா நோகாமல் தின்பேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை காயம் செய்து மாயம் செய்தாள் ஏ
அட கை நீட்டும் தம்பியே எனை கட்டி வைதாள் அன்னையே
நீ வெட்டினாலும் நீரை வார்க்கும் இந்தப் பாறையே

அவள் சிக்கு எடுக்கும் கூந்தளுக்கு சீப்ப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில் செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் நின்ற போதும் கொண்ட காதல் கொள்கை மாறாது

No comments: