Monday, September 22, 2008

உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால் ,அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்


ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
உன் பார்வையில் விழுகிற பொழுது
தொடு வானத்தை தொடுகிற உணர்வு
ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
அந்த மயக்கத்தில் எத்தனை மயக்கம்
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்
நின்றாலும் கால்கள் மிதக்கும்

நடை உடைகள் பாவனை மாற்றிவைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
புரியாமல் திணறி போனேன்
யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்
நீ தானோ என்றே திரும்பிடுவேன்
தினம் இரவினில் உன் அருகினில்
உறங்காமல் உறைந்து போவேன்
இது ஏதோ புரியா உணர்வு
இதை புரிந்திட முயன்றிடும் பொழுது
ஒரு பனிமழை ஒரு எரிமலை
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

நதியாலே பூக்கிற மரங்களுக்கு
நதி மீது இருக்கும் காதலினை
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா
கரை ஓர கனவுகள் எல்லாம்
உனக்காக ஒரு பெண் இருந்துவிட்டால்
அவள் கூட உன்னையும் விரும்பிவிட்டால்
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்
திறக்காத கதவும் திறக்கும்
தன் வாசனை பூ அறியாது
கண்ணாடிக்கு கண் கிடையாது
அது புரியலாம் பின்பு தெரியலாம்
அதுவரையில் நடப்பது நடக்கும்

No comments: